ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி மக்கள் போராட்டம் !

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் என்பவற்றுக்கு அண்மையில் இந்த மதுபானசாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மக்கள், பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டுள்ளது.

ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை சிறுவில் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபான சாலையை அனுமதியை நிறுத்த கோரி பிரதேச செயலகம் முன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் தாங்கியவாறு உள் நுழைந்து ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *