கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் பொலிஸில் முறைப்பாடு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த மூன்று வருடங்களாக அகப்பை காம்பு, தடி மற்றும் தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்ததாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது மற்றும் பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளதுடன் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் குறித்த 11 மாணவிகளும் இன்று (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *