காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரி இலங்கையில் போராட்டம்!

காஸா பகுதியில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தக்கோரியும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இன்று லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் நடந்த மோதலில் 15,000 குழந்தைகள் மற்றும் 7,500 பெண்கள் உட்பட 36,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதில் இலங்கை பலஸ்தீன ஒற்றுமைக் குழு, சோசலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *