பெண்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற இளைஞர் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார்.

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து உரையாடியிருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதனை அவதானித்த அயலவர்கள் தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *