கிழக்கில் தமிழர் அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது – இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்

“அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக” கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை தொடர்பிலான நூல் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமூகத்தின் பொருளாதார அரசியல் அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத அளவிற்கு, அரசியல் கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. மாவட்ட மக்களினது தேவைகளை அறிந்து செயற்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *