தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய நாட்டின் அனைத்து துறைகளும் பலப்படுத்தப்படும். – சுனில் ஹந்துனெத்தி

“பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படமாட்டாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசாங்கம் கடமையை சரிவர செய்யாமையினாலேயே இன்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 75 வருட ஆட்சி தொடர்பில் மக்கள் அதிருப்தியிலேயே உள்ளனர்.விரைவில் இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார கொள்கை திட்டம் எம்மிடம் உள்ளது. இன்று நாட்டில் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

திறந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களையே இந்த நாட்டு மக்கள் இன்று அனுபவிக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய நாட்டின் அனைத்து துறைகளும் பலப்படுத்தப்படும். மக்களுக்கு இடையூறான செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் முன்னெடுக்கப்படமாட்டாது” இவ்வாறு சுனில்ஹந்தனெத்தி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *