மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு !

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) கலந்து கொண்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.

 

அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

மகாவம்சம் நூலானது பல பாகங்களை கொண்ட இலங்கையின் தொடர்ச்சியான வரலாற்று மூலதாரமாகும். அதேவேளை மகாவம்சத்தில் கூறப்படும் ஒருபக்க சார்பான – பௌத்த மதத்திற்கு ஆதரவான கருத்துக்களே இன்று வரை இலங்கையில் நீளும் தமிழர் – சிங்களவர் பிரச்சினைகளுக்கான அடிப்படையை இட்டுக்கொடுத்தது என தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *