சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க – வெளியாகியுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரணில் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26.7.2024) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *