பிரிட்டனின் சௌத்போர்ட்டில் சூறையாடப்பட்ட இலங்கையரின் வர்த்தக நிலையம்!

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையை சேர்ந்த ஒருவரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையம் சூறையாடப்பட்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

 

வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர்மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார்.

 

அவர்களிற்கு வர்த்தக நிலையத்தை உடைத்து உள்ளே செல்வதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே தேவையாகயிருந்தது அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தை,அது பயங்கரமானதாக காணப்பட்டது அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

 

அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் அவர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சாப்பிட்டார்கள் அது பெரும் பயங்கரம் நான் காப்புறுதி செய்யவில்லை என இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் – குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *