பங்களாதேஷ் கலவரம் – 30ற்கும் அதிகமான குழந்தைகள் பலி !

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது முப்பத்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த குழந்தைகள் ஐந்து வயது நிரம்பாதவர்கள் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அரசு நிர்ணயித்த இட ஒதுக்கீடு முறை குறைக்கப்பட்டது, ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பொலிஸ் காவலில் உள்ளவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் 266 பேர் உயிரிழந்ததோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *