தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எந்த வகையிலும் உதவாது – தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எந்த வகையிலும் உதவாது என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பேரணி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்கள் பதவியில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் நாடு இலங்கை மட்டுமே எனவும், அவ்வாறு மக்களின் பணத்தை வீணடிப்பது முட்டாள்தனமான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *