வெளியானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாற்றுக் கொள்கை மையத்தின் புதிய ஆய்வு முடிவுகள்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் களம் கட்சி தாவல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகள் என சூடுபிடித்துவரும் நிலையில், தேர்தலில் யார் வெல்வார் என்ற கருத்து கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அந்த அடிப்படையில், மாற்றுக் கொள்கை மையம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அனுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரையும் கருத்திற்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

“உங்கள் குடும்பத்தின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்ய யார் மிகவும் பொருத்தமானவர் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ” என்பதை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில்;

 

28.8 வீதமான மக்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ள அதேவேளை, 24.3 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளதுடன்,19.3 வீதமான மக்கள் சஜித் பிரேமதாசவை மிகவும் பொருத்தமானவர் என தேர்ந்தெடுத்துள்ளதாக மாற்றுக் கொள்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு 15.5 வீதமான மக்கள் ஆதரவு வெளியிட்டுள்ள நிலையில், 12.1 வீதமான மக்கள் யாரை தெரிவு செய்வது என்பது தெரியாது என பதிலளித்துள்ளனர்.

 

இதேவேளை, சகோதர மொழி மக்களிடையே 24.1 வீதமானவர்கள் ரணில் எனவும் 33.1 வீதமானவர்கள் ஒருவரும் இல்லை என பதிலளித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *