வாகன விபத்தில் 17 வயது பாடசாலை மாணவி பலி – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதுண்டதில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த மாணவி தனியார் வகுப்பொன்றிற்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *