மருந்து கொள்வனவில் ஊழல் மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கெஹலியரம்புக்வெலவுக்கு பிணை !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

அதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 7 மாதங்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *