ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரிய கஜேந்திரன் கைதாகி விடுதலை!

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு நேற்று (13-) கிளிநொச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *