முடிவுக்கு வந்தது பிரித்தானியாவின் மிகப்பெரும் இரண்டு தசாப்த கால சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விவகாரம் !

2 தசாப்தங்களுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஏழு ஆண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பிரித்தானியாவின் மிகப்பெரிய விசாரணையின் கீழ் வெள்ளிக்கிழமை (13) கடுமையான சிறைத்தண்டனைகளைப் பெற்றனர்.

 

2000 களின் முற்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரோதர்ஹாமில் செய்யப்பட்ட குற்றங்களுக்காக அவர்களுக்கு தற்சமயம் ஏழு முதல் 25 ஆண்டுகள் வரை சித்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரித்தானியாவின் ஒரு தசாப்தகால விசாரணையில் இந்த வழக்கு மிகப்பெரியது ஆகும்.

 

சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர்கள் 11 மற்றும் 15 வயதுடையவர்களாக இருந்ததாகவும், குற்றம் நடந்த காலத்தில் இருவரும் பராமரிப்பு அமைப்பில் நேரத்தைச் செலவிட்டதாகவும் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது.

 

1997 மற்றும் 2013 க்கு இடையில் ரோதர்ஹாமில் ஆண்களின் கும்பல்களால் குறைந்தது 1,400 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் மற்றும் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *