எகிறும் தேர்தல் முறைப்பாடுகள் – 24 மணித்தியாலங்களில் 337 முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதில், சட்ட மீறல்கள் தொடர்பில் 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளில் 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *