2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, 17,140,354 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன.
இதேவேளை இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் நிறைவடைந்து.
இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
நுவரெலியா 80%,
மொனராகலை – 77%,
பொலன்னறுவை – 78%,
இரத்தினபுரி – 75%,
கம்பஹா – 80%,
கொழும்பு- 75% – 80%,
அம்பாறை – 70%,
கிளிநொச்சி – 68%,
புத்தளம் – 75%
வன்னி 70%
யாழ்ப்பாணம் 65%