தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்கள விடயங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பொலிஸாரின் மீதான மக்களின் நம்பிக்கை குன்றியுள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

 

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் பொலிஸாரின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது எமது கடமையாகும்.

 

இந்த முயற்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது, அரசியல் செல்வாக்கு இன்றி பொலிஸ் திணைக்களம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *