மீண்டும் கூட்டமைப்பு – வீட்டுச்சின்னத்தில் இணைய புளோட், ரெலோவுக்கு கால அவகாசம்!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பிலிருந்து  கட்சியில் இருந்து விலகிய  ரெலோ புளொட்டுக்கு கட்சியில் இணைய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *