ஹெக்டயருக்கான உரமானியம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஹெக்டயருக்கு 15 ஆயிரம் ரூபாவே உரமானியமாக வழங்கப்பட்டுவந்தது.இந்நிலையில் உரமானியக் கொடுப்பனவு, ஒக்டோபர் 01ம் திகதி அமுலுக்குவரும் வகையில் 25 ஆயிரம்
ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது போன்று, உரமானியக் கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க அவசர நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்கு அம்பாறை மாவட்ட பெரும்போக விவசாயிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
விவசாய மூலப்பொருட்களை உரியவாறு முகாமைத்துவம் செய்யும் நோக்கில்,
நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கும் சிறந்த
விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயன மற்றும் சேதன உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
புதிய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் உரமானியக் கொடுப்பனவு ஹெக்டயருக்கு ரூபா 15 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டது.இருந்த போதிலும் அது
உரிய நேரத்திற்கு விவசாயிகளை சென்றடையவில்லை. இதனால், விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். ஆகையால், அதிகரிக்கப்பட்ட உரமானியக் கொடுப்பனவை பெரும்போக விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேறகொண்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் விசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.