ஐ.தே.க சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம் !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியானது, எஞ்சியிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல தலைவர்களை இழக்கக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, யானை சின்னத்திலேயே பொதுத் தேர்தல் உள்ளிட்ட எதிர்வரும் தேர்தல்களில் கட்சி களமிறங்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்தமையால், போராட்டம் நிறுத்தப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *