ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க..?

நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தைத் கைவிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேரவை தலைவர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடவுள்ளது.

 

சுற்றுலாத்துறையின் அவசியத்தை கருத்திற்கொள்ளும் போது தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ், நாட்டிற்கு சொந்தமானதாக காணப்பட வேண்டும். இதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்தப்போவதில்லை. எனினும் அதன் முகாமைத்துவத்தினை சீர்செய்வதற்கான திட்டமொன்று முன்வைக்கப்படும். என தேசிய மக்கள் சக்தியின் பேரவை தலைவர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *