4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தமிழ்பாட ஆசிரியருக்கு லண்டனில் 11 ஆண்டுகள் சிறை !

பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற 8 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனியார் வகுப்பு தமிழ்பாட ஆசிரியராகவும் தபாலக முகாமையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவரால் பல மாணவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படட்மைக்கான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு குறொய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அங்கு அவர் 8 வயது முதல் 4 வயதுக்குட்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமைகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் தனிப்பட்ட பயிற்சிக்காக அவரது வீட்டிற்குச் சென்றபோது தனுஹரனால் பாலியல் ரீதியாக தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறோய்டனை ஐ உள்ளடக்கிய பொதுப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சார்ஜென்ட் விக்கி தாம்சன் இது தொடர்பில் கூறிய போது “பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறைக்கு வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததன் மூலம் அதீத துணிச்சலைக் காட்டியுள்ளனர். அவர்களின் தைரியத்திற்கு நன்றி.  அதேவேளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எவரையும் நாங்கள் முன் வந்து காவல்துறையிடம் பேச ஊக்குவிப்போம். எவ்வளவு நேரம் கடந்தாலும், எங்கள் சிறப்பு அதிகாரிகளால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் – ஆதரிக்கப்படுவீர்கள். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *