இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் !

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்

 

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கூறும் போதே பிரதமர் அலுவலகத்தில் கியூபா தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்

 

இதேவேளை இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஏறக்குறைய 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுத்தப்பட்ட நுளம்பு ஒழிப்பு திட்டங்களை மீள ஆரம்பித்தல், இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மற்றும் விளையாட்டு கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது

 

மேலும் கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் , கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்திருந்தார் .

 

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *