இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தினசரி முறைப்பாடுகள் – 400 ஐ கடந்த முறைப்பாடுகள்!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *