பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சு மற்றும் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்ற போதே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை சமோவா அபியாவல் ‘சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எதிர்காலம்: ஆக்கபூர்வமான பொதுநலவாய அமைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.