40 சடலங்களும் அடக்கம் செய்யப்படும்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் அரச செலவில் அடக்கம் செய்ய மாவட்ட நீதிவானின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தோட்டம் பொது மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகமும் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்துச் செல்லப்படாததும் அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இட நெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாலும் இவற்றை அரச செலவில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், சடலங்கள் பொலித்தீன் பைகளில் போடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *