பிரதமர் ஹரினிக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு
ருஹூனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக முன்னாள் உபவேந்தர் சுஜீவ அமரசேன உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் இதுவொரு அரசியல் பழிவாங்கல் எனவும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபரை நியமிப்பது தொடர்பில் வழமையாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ் அடிப்படை உரிமை மீறல் வழக்கில் கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.