டெங்கு பரவுவதனை தடுக்கத் தவறிய ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாத்ததும்பறை சுகாதார உத்தியோகஸ்தர் திருமதி எச். எம். சல்வத்துர ஆராச்சி வத்துகாமம் பகுதியில் இவ்வாறு டெங்கு பரவுவதை தடுக்க தவறியவர்களை அடையாளம் கண்டுள்ளார். பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அண்மைக்காலமாக 21 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடி க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இவர்கள் உதாசீனமாக இருந்துள்ளனர்.