க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் நாளொன்றுக்கு ஒன்பதாக இருந்தது. தற்போது அது நான்கு தொடக்கம் இரண்டாகக் குறைந்துள்ளது. அத்துடன் சில நாட்களில் எந்தவித உயிரிழப்பும் வீதி விபத்துக்களினால் பதிவாகவில்லை.
பொலிஸ் புள்ளிவிபரப்படி வீதிவிபத்துக்களால் தினமும் 10 தொடக்கம் 15 பேர் வரை நிரந்தரமாக ஊனமடைகின்றனர். இது போரின் போது ஒரு நாளைக்கு ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.