பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !
இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை. 75 ஆண்டு கால பிரச்சினைகளைத் தீர்க்கவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.