பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்
அநுர தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நற்பணிகளை ஆதரிப்பதாக முன்னாள் யுஎன்பி எம்பி டொக்டர் ஆஷூ மாரசிங்க கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், எந்த கொமிஷனும் இல்லாமல் பாதுகாப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்பளித்தால், அவர்களைப் பார்த்து 100 பேர் வருவார்கள் என்கிறார். இதுவரையான என்பிபியின் ஆட்சிக் காலத்தில் எத்த தவறுகளும் நடக்கவில்லை என கூறும் மாரசிங்க அநுர இன்னும் 10 வருடங்கள் இலங்கையை ஆளுவார் என கட்டியம் கூறுகிறார்.