பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.
இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.