பரிஸ் லாகூர்னே சிவன் கோயில் உரிமையாளர், ஜக்கிய மக்கள் சக்தி குடும்பி ஜெயேந்திரனுக்கு பிடியாணை – யாழ் நீதிமன்றம் !

பரிஸ் லாகூர்னே சிவன் கோயில் உரிமையாளர், ஜக்கிய மக்கள் சக்தி குடும்பி ஜெயேந்திரனுக்கு பிடியாணை – யாழ் நீதிமன்றம் !

நல்லூர் லக்ஸ் விடுதி உரிமையாளரும் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்மாவட்ட பிரதம அமைப்பாளருமான வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பிடிவிராந்து நேற்றைய தினம் யாழ்ப்பாண நீதவானால் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிவேலு ஜெயேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளரான உமாச் சந்திரப்பிரகாஷின் மைத்துனருமாவார்.

வெற்றிவேலு ஜெயேந்திரன் யாழ்ப்பாண சிவில் சமூக தலைவரான அருண் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது லக்ஸ் விடுதியையும் தன்னையும் தாக்கினார்கள் என பொலிஸ்சில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கில் யாழில் இடம்பெற்று வரும் நிலையில், முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டித்து வந்தார். இதனால் கோபமடைந்த நீதவான் வெற்றிவேலு ஜெயேந்திரனை கைது செய்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டுள்ளார்.

அருண் சித்தார்த்தின் மைத்துனியான தங்கதுரை தர்சினியை பத்து வருடங்களாக திருமணம் முடித்து வாழ்ந்தவர். தற்சமயம் வெற்றிவேலு ஜெயேந்திரன் தங்கதுரை தர்சினியை ஒரு பெண் குழந்தையுடன் கைவிட்டு விட்டு பெறாமகளுடன் குடும்பம் நடத்துகிறார். வெற்றிவேலு ஜெயேந்திரன் மீது ஆள் அடையாள மாறாட்ட வழக்கு, காணி மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு சொந்தமான பிரான்ஸ்சில் லார்க்கூர்னேயில் அமைந்துள்ள சிவன் கோயிலும் வருமானவரி மற்றும் கவாலாத் தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு கணக்காளர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏனைய வழக்குகளிலும் வெற்றிவேலு ஜெயேந்திரன் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *