புலிகளும் ஜே.வி.பியினருமே ஆயுதமேந்தி போராடி நாட்டை கொள்ளையடித்தனர் – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

புலிகளும் ஜே.வி.பியினருமே ஆயுதமேந்தி போராடி நாட்டை கொள்ளையடித்தனர் – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் புலிகள் மற்றும் ஜே.வி.பியினர் ஆயுதமேந்தி பேராடியதால் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரத்தின் பின்னரான 77 ஆண்டுகால வரலாற்றில் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இந்த பௌத்த பூமியில் மக்கள் விடுதலை முன்னணியும், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆயுதமேந்தி போராடின. அவர்களே நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கும் கொள்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்துக்கு இயைவானதாக காணப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்இ அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.“ என தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *