யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் கைகலப்பு – இருவர் மருத்துவமனையில்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இருவர் காயடைந்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வு, கலைவாரம் உட்பட்ட நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெறுவதே சவாலாக காணப்படுகின்றது. கலைவார நிகழ்வுகளுக்கு தொடர்ச்சியாக நிர்வாகம் தடைவிதித்த வரலாறுகளும் உண்டு.