முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

 

மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 40,000/- ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெற்ற 36,000/- ரூபாவை அபராதமாக வசூலிக்க உத்தரவிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *