பிரதமர் ஹரிணியின் யாழ்.விஜயம் – பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று சமூகத்துடன் ஊடாடினார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றுக் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு மதியம் சமூகமளித்த பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சுழிபுரம் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்