அதானி குழுமம் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையை கைவிட்டது என்கிறார் ரணில் – புலம்பெயர் தமிழர்களை முதலிட அழைக்கிறது அனுர அரசு !
அதானி இலங்கையில் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டதன் மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதானி குழுமம் வெளியேற்றத்தால் எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் 484 மெகாவாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நாட்டின் பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் எனவும், அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பா.உ இராமலிங்கம் சந்திரசேகர் தெரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.