மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளியான அழகரத்தினம் வர்ணகுலராசா பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்தார். நீர் மற்றும் உணவு தவிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவர் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரைவாசி தானும் நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டுடன் வர்ணகுலராசாவின் சாகும்வரை போராட்டம் முன்னாள் போராளிகளின் தலமையிலான மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பால் நீர்ராகரம் கொடுத்து நேற்றைய தினம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்முனைப்போடு ஈடுபட்ட முன்னாள் போராளிக்கு பல தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் இடத்திலிருந்தும் ஆதரவு பெருகி வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த அழகரத்தினத்தின் உடல்நிலையை கருதி அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தீபன் கருத்து தெரிவித்தார்.
இந்த விடயத்தில் கிளிநொச்சி எம்பி சிவஞானம் சிறிதரனின் சார்பு ஊடகவியலாளர் ஒருவர் மூக்கை நுழைத்து கேள்வி கேட்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்சையை உருவாக்கினார்.
பெரும் காசு கொலிக்கும் மாவீரர் துயிலுமில்ல வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம்பி சிவஞானம் சிறிதரனிடமிருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை மீட்க மல்லுக்கட்டும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பினர் அழகரத்தினம் வர்ணகுலராசாவின் உயிரில் காட்டிய அக்கறையை கேலிக்குள்ளாக்கினார்.
அவருடைய கேள்விகளை இடைமறித்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக உறுப்பினர் ”நான் மூன்று நாளாக இங்கே நிற்கிறேன், நீர் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, றோவினால் நடத்தப்படும் போராட்டம் என பதிவு போட்டு வருகிறீர்’’ என காட்டமாக பதிலளித்தார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக் கொண்டுவரப்ட்டுள்ளது. வர்ணகுலராசா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.