அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம் 

அரசாங்க அதிபர் மகன் ஏற்படுத்திய விபத்தினால் இருவர் காயம்

 

யாழ் அரசாங்க அதிபர் ம. பிரதீபனின் மூத்த மகன் ஆதிரையன் செலுத்தி வந்த சொகுசு கார் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஆதிரையனும் அவரது நண்பனும் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சையான தகவல்கள் ஊடகங்களில் பரப்படுகின்றன.

அரசாங்க அதிபரின் மகன் செலுத்தி விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் உத்தியோக பூர்வ வாகனம் எனவும் அதனை சாரதி இன்றி மாவட்ட செயலாளரின் மகனே செலுத்தி சென்று விபத்துக்குள்ளாகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. மறுபுறம் விபத்திற்குள்ளான வாகனம் அரசாங்க அதிபரின் தனிப்பட்ட வாகனம் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் அரசாங்க அதிபரின் வாகனம் என பிறிதொரு காரின் படமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ் விபத்து தொடர்பாக பிறிதொரு சர்ச்சையும் எழுந்துள்ளது. காரை செலுத்திய அரசாங்க அதிபரின் மகன் ஆதிரையன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் ஆதிரையன் போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவரை இந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்க அரசாங்க அதிபரின் இரண்டாவது மகனான ஆரணனை மது அருந்தினாரா? என்ற சோதனைக்கு காவல்துறையினர் ஈடுபடுத்தியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த ஆள்மாறாட்ட பின்னணியிலேயே அரசாங்க அதிபரின் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தை விசாரிக்கும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர் மற்றும் எம்பிக்கள் இவ்விடயம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *