வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வாகனத்தில் கேரளா கஞ்சா வடமராட்சியிலிருந்து கிளிக்கு கடத்தல் பரந்தனில் கைது !
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராமுக்கும் அதிக பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது லொறியின் அடிப் பகுதியில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட தொட்டியிலிருந்து 182 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 34, 40 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து வாகனம் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் வடகல் எல்லையில் எம்முடைய கடல் வளத்தை அழிப்பதுடன் இந்த போதைப் பொருட்களை யாழுக்கு கடத்தி வந்து தமிழ் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றனர். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்திய அரசை வற்புறுத்தும் செயற்பாட்டை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மட்டும் மேற்கொண்டு வருகிறார். ஏனைய தமிழ் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர். எம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஆனால் இந்தியத் தூவரை மனம்நோகச் செய்யக் கூடாது என்ற பாணியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.