ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை 

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை
கடந்த காலங்களைப்போல் வீட்டுச் சாப்பாடு சிறையில் கிடைக்கவில்லை குமுறிய ஞானசார தேரர்.
சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் வைத்தியர்கள் பரிந்துரைத்தும், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாடியுள்ளார்.
இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *