முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

 

மக்களை பற்றி யோசிக்காத அரசியல் கட்சிகளே நாட்டில் உள்ளன – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கவலை. தற்போதுள்ள அரசியல் கட்சிகள் பொறுப்பற்றவையாகவும், தேசிய நலன்கள் தொடர்பில் சிந்திக்காதவையாகவும், அடுத்த தேர்தலில் என்ன செய்யலாம்? வெல்வோமா, தோற்போமா என சிந்திப்பவையாகவும் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் உள்ள இந்த இலங்கையை பொறுத்தமட்டில் முதலாவதாக அரசியல் நெறிமுறைகள் மாற்றமடைய வேண்டும். அரகலயவின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட மிக வலுவான செய்தியை இன்னமும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் சரிவர புரிந்துணரவில்லை என்றே தெரிகிறது.

நாம் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் யாவும் பாராளுமன்றத்துக்குள்ளிருந்து தூக்கியெறியப்பட்டன. எனவே வேறெதனையும் செய்வதற்கு முன்பதாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல அரசியலமைப்பு வரைபுகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து, தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமானதொரு வரைபை தயாரிப்பது இலகுவானதாக இருக்கும். எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் பெரும்பான்மையானோர் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை நிராகரித்துள்ளனர். இல்லாவிடின் அவர்களது கட்சி அதனை நிராகரித்துள்ளது. அவ்வாறிருக்கையில் தற்போது மாத்திரம் அவர்களால் இதனை எவ்வாறு செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை என்றார். தற்போது அதிகாரத்திலிருக்கும் என்பிபி அரசிற்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மையை வழங்கியுள்ளதால் சந்திரிக்கா அம்மையார் கவலைப்படத் தேவையில்லை என அரகல்ய போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *