போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

போதைப்பொருள் பாவனையில் இருந்து எம் மக்களை காப்பாற்றுங்கள் – சபையில் பா.உ ரவிகரன் !

 

வடபகுதியில் அதிகரிந்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒருதொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாகவும் எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மார்ச் 4 பாராளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பா உ ரஜீவன் வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணையை நேற்று கொண்டு வருவதை முன்மொழிவது போன்று தமிழரசுக் கட்சியின் வன்னிப் பா உ துரைராசா ரவிகரனின் உரை அமைந்தது.

அங்கு மேலும் பேசிய பா.உ ரவிகரன், போதையால் நாடுமட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார் பா உ துரைராசா ரவிகரன்.

இதற்கிடையே முல்லைத்தீவில் பள்ளி மாணவி கொண்டு சென்ற நீரை அருந்திய பள்ளி மாணவிகள் வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட்ட சம்பவம் மார்ச் 4ம் திகதி நடைபெற்றுள்ளது. இதனை விசாரிப்பதை விடுத்து மாணவி கசிப்பு கொண்டுவந்துவிட்டார் என்று எண்ணி ஆசிரியர் பள்ளி மாணவியைத் அடித்துள்ளார். தன்னுடைய மகளைத் தாக்கிய ஆசிரியரை அம்மாணவியின் தந்தை போய்த் தாக்கியுள்ளார். இப்பொதுழுது இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *