சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தேயிலை விலை நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம் ஜயரத்ன தெரிவித்தார்.
ஒரு கிலோ தேயிலையின் விலை கடந்த வாரம் 320.00 ரூபாவிலிருந்து 360.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேயிலைக் கொலுந்து ஒரு கிலோவுக்கு 55.00 ரூபா முதல் 62.00 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் நாட்டின் தேயிலை உற்பத்தியன் அபிவிருத்திக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் அமைச்சர் கூறினார்.