கடமை நேரத்தில் போதையுடன் தள்ளாடும் பொலிஸ் பிரிவும் கிளீன் சிறீலங்காவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் !
பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு இலங்கையில் அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களுக்கு பின்னணியிலும் பொலிஸார் செயற்பட்டுவருவதாக கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் தமிழ் எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை பொலிஸ்பிரிவு முழுமையாக கிளீன் சிறீலங்கா திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு கிளீன் செய்யப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.