அறுபது நாட்களில் சிறுவர்களுக்கு எதிராக 1400 குற்றச்செயல்கள் !
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.
மேலும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகளும், சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.