யாழ் 17 உள்ளூராட்சி சபைகளிலும் நாம் தான் – நாடு மட்டுமல்ல கிராமங்களும் அனுரவோடு தான் ! அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தபோது இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் இன்றைய தினம் என்.பி.பி செலுத்தியுள்ளது.